Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Showing posts with label தமிழ் ஈழம். Show all posts

Tuesday, 27 November 2012

மாவீரர் தினம்-நவம்பர் 27




மண்ணின் மானம் காக்கவும்,தம் இன மக்கள் சுதந்திரமாக வாழவும்  தம் இன்னுயிர்களை கொடையாக தந்த தேசிய தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூறி வீர வணக்கம் செலுத்துவோம்.

மாவீரர்களுக்கு வீர வணக்கம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

அருணை வினோத்

Sunday, 5 August 2012

டெசோ என்ன செய்ய போகிறது?...


டெசோ ஒன்றுமே செய்யப் போவதில்லை,கருணாநிதி அரசியல் செய்வதற்கு வேண்டுமானால் பயன்படலாம்,அது ஈழத் தமிழர்களின் ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட பதில் சொல்லப் போவதில்லை.

ஆட்சியில் இருக்கும் போது ஈழத் தமிழர்களுக்காக ஒன்றுமே செய்யாத கருணாநிதி இப்போது ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் செய்கிறார்.

ஒரு இனத்தின் ஓலக்குரல் தேசம் முழுக்க கேட்ட போது அதற்கு காரணமான கேடு கெட்ட காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்து பதவிக்காக டெல்லியில் பிச்சை எடுத்தவர் என்று டெசோ மாநாடு நடத்துகிறார்.

Sunday, 25 March 2012

ஜெனீவா தீர்மானத்தில் இந்தியாவின் இரட்டை நிலை...




ஐ.நா வின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்துவிட்டு,இலங்கையை சமாதானப்படுத்த பிரதமர் கடிதம் எழுதி இருப்பது,தமிழர்களாகிய நமக்கு பெருத்த அவமானம்,இதில் இருந்தே தெரிகிறது இந்தியாவின் இரட்டை வேடம்.

Thursday, 15 March 2012

இலங்கையின் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்-ஆவணப்படம்



ஜெனிவா தீர்மானமும்,இந்திய(தமிழக)அரசியலும்...




சில மாதங்களுக்கு முன்னால் இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே இப்படி சொன்னார் "இந்த போரை நாங்கள் இந்தியாவின் சார்பாக வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறோம்" என்றார்.இதற்கு இந்திய அரசு இதுவரை அந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்கள்,அதைத்தான் இந்திய அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது.

Friday, 9 March 2012

ஜெனீவா தீர்மானம்...







ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பு.


லட்சகணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்,லட்சகணக்கான மக்கள் காணாமல் போயினர்,பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்,கட்டுகடங்காத மனிதஉரிமை மீறல்கள் இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் நடைபெற்றது என்பதை இந்த உலகம் அறியும்.இலங்கையில் நடந்தது ஒரு அப்பட்டமான இன படுகொலை.தட்டிகேட்க வேண்டிய இந்தியா ஆயதங்களை கொட்டிகொடுத்து வேடிக்கை பார்த்ததுதான் உலக தமிழர்களின் உச்சபட்ச ஏமாற்றம்.